யாழ். பல்கலை மாணவனுக்குக் கொரோனா!

யாழ். பல்கலை மாணவனுக்குக் கொரோனா!

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் ஒருவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 491 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் பயிலும் கேகாலையைச் சேர்ந்த மாணவனுக்கே தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த நிலையில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் இன்று மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தபட்டார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 447 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 3 பேருக்குக் கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் மூவரும் பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வலைப்பாடு தொற்றாளர்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருந்த நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.