கொரோனவால் 16 நாட்களில் 86 பேர் சாவு!

கொரோனவால் 16 நாட்களில் 86 பேர் சாவு!

இலங்கையில் கொரோனா வைரஸால் கடந்துள்ள 16 நாட்களில் மாத்திரம் 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை 396 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவின் முதலாம், இரண்டாம் அலைகளின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர். இதன்படி கொரோனாவால் இதுவரை மொத்தமாக 409 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.