பொத்துவில், பொலிகண்டி பேரணியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் கைது. தாய் கதறல்.

பொத்துவில் பொலிகண்டி பேரணியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் பருத்தித்துறையில் கைது!பொலிஸ் நிலையம் முன் தாயார் கதறல்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இன்று பிற்பகல் கைதுசெய்தனர்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் வடக்கு – கிழக்கில் கைதுசெய்யப்பட்ட முதலாவது நபர் இவராவார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெறவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இளைஞரின் உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் முன்பாகக் காத்திருக்கின்றனர். இளைஞரின் தாயார், மகனின் விடுதலையைக் கோரி பொலிஸ் நிலையம் முன்பாகக் கதறி அழுகின்றார்.

பருத்தித்துறையில் பேரணி இடம்பெற்ற வேளை இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து அவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.