கோவிட் நோயை இல்லாது ஒழிக்கும் செயற்பாடு காரைநகரில் திருவிழாவாக கொண்டாட ஏற்பாடு.

கொடிய கோவிட் நோயை வெற்றி கொள்வதற்கு தடுப்பூசியை மக்களுக்கு போடும் மாபெரும் செயல்திட்டம் யாழ்ப்பாணத்தில் விரைவில் ஆரம்பமாக உள்ளது.

நரகாசுரன் இறந்த நாளை தீபாவளியாகக் கொண்டாடுவது போல் உயிர் கொல்லி கோவிட் நோயை இல்லாது ஒழிக்கும் செயல்பாடும் காரைநகரில் திருவிழாவாக நடாத்த காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்காக தடுப்பூசி பற்றி தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று J/44 ஊரி காரைநகரில் கிராம அலுவலரின் ஒத்துழைப்போடு நடைபெற்றது .

Leave A Reply

Your email address will not be published.