இன்று 501 பேருக்குக் கொரோனாத் தொற்று!

இன்று 501 பேருக்குக் கொரோனாத் தொற்று!

இலங்கையில் மேலும் 501 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த வாரங்களாக 750 முதல் 950 பேர் வரையிலான தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று அந்த எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 647 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றில் இருந்து இதுவரை 71 ஆயிரத்து 823 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 6 ஆயிரத்து 176 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.