பேரூந்து குறுக்குக்கு வீதியில் கட்டுபாட்டை இழந்து விபத்துகுள்ளாகியது.

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 13 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

பிபில பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு வந்த பஸ் வண்டியே 22/02/பிற்பகல் ரதல்ல குறுக்குக்கு வீதியில் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இரந்து தெரியவருகின்றது.

18 பேர் வந்த இந்த பஸ் வண்டியில், பஸ்ஸின் சாரதி உட்பட 13 பேர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .


விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.