இலங்கைக்கு எதிரான ஒருதலைதபட்ச தீர்மானத்தை எதிர்க்குமாறு உறுப்பு நாடுகளிடம் தினேஸ் கோரிக்கை

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை செவிவழி தகவல்கள், ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் அல்லது ஒருகோணாத்தை அடிப்படையாக கொண்ட விடயங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படக்கூடாது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமை அமர்வில் காணொளி மூலம் ஆற்றிய உரையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தினேஸ் குணவர்த்தன மேலும் தெரிவிக்கையில்,

மனிதஉரிமை பேரவை உடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டை கருத்தில் கொண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிராகரிப்பதன் மூலம் எமக்கு ஆதரிக்குமாறு உறுப்புநாடுகளை கேட்டுக்கொள்கிறோம்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை உடனடி கவனத்தை செலுத்தக்கூடிய நிலைமை இலங்கையில் காணப்படுகின்றதா அல்லது இந்த பிரச்சாரம் அரசியல் நோக்கங்களை கொண்டதா என்பதை தீர்மானிக்கும் பெறுப்பை உறுப்பு நாடுகளிம் விட்டுவிடுகிறோம்.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு மக்கள் வழங்கிய ஆணை இலங்கை மக்கள் ஜெனீவா தீர்மானத்தை நிராகரித்ததை வெளிப்படுத்தியது.

நவம்பர் 2019 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு மக்கள் வழங்கிய ஆணை ஜெனீவா தீர்மானத்தை இலங்கை மக்கள் நிராகரித்ததை தெளிவாக வெளிப்படுத்தியது.

இந்த ஆணையை அடிப்படையாக வைத்து நான் இலங்கை இணை அணுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து வெளியேறும் என நான் அறிவித்தேன்.

ஜெனீவாவில் 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு எதிரானது – நிறைவேற்றப்பட முடியா விடயங்களை உள்ளடக்கியது. 2015 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தீர்மானத்திற்கு இணை அணுசரனை வழங்கியது. இது எங்கள் நாட்டிற்கு எதிரானது.

அந்த தீர்மானம் நிறைவேற்றமுடியாத பல விடயங்களை உள்ளடக்கியதாக காணப்பட்டது மேலும் அந்த தீர்மானங்கள் இலங்கையின் அரசமைப்பி;ற்கு முரணாணவையாக காணப்பட்டன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் முன்னொருபோதும் இல்லாத பிரச்சார நடவடிக்கை காணப்படுகின்றது.

மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின்னர் இலங்கையின் வீரமிக்க படையினர் விடுதலைப் புலிகளை செயல் இழக்கச்செய்தனர்.
இலங்கை அரசாங்கம் நாட்டின் ஒருமைப்பாடு இறைமை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து பாதுகாப்பதற்காக தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கைய இலங்கைக்கு எதிரான பிரச்சார நடவடிக்கை. அதனை நிராகரிப்பதோடு சர்வதேச குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறோம்.

இலங்கை வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியதாக தெரிவிக்கப்படுவதை நிராகரிததுள்ள அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் நிராகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.