இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெயில் விளையாடவுள்ளார்.

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இருதரப்பு கிரிக்கெட் தொடரின் முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது சர்வதேச தொடர் எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் இரண்டு வருடங்களின் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணியில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தன்னுடைய அதிரடி துடுப்பாட்டம் மூலம் முழு கிரிக்கெட் ரசிகர்களின் மனதையும் வென்ற 41 வயதான கிறிஸ் கெயில் கடந்த 2019 மார்ச் மாதம் 8ஆம் திகதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இருபதுக்கு இருபது சர்வதேச போட்டியின் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இருபதுக்கு இருபது சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை.

இருந்தும் தொடர்ந்தும் 20 ஓவர்கள் கொண்ட லீக் போட்டிகளில் அதிகம் அதிகமாக விளையாடி வரும் கிறிஸ் கெய்ல் தற்போது இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது சர்வதேச தொடரில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

400 இற்கும் மேற்பட்ட இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்ட கிறிஸ் கெய்ல் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் குயீட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.