போதைப்பொருள் இன்று பயங்கரவாதமாக மாறியுள்ளது. சஜித் பிரேமதாச

போதைப்பொருள் கடத்தல் இன்று பயங்கரவாதமாக மாறியுள்ளது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 30 வருடங்கள் காணப்பட்ட பயங்கரவாதத்தை ஒழித்தது போன்று போதைப்பொருள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சுதந்திர மற்றும் சுயாதீன நீதித்துறையில் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.