சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பதாக அறிக்கை.

நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிராத்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நான் என்றும் பதவிக்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயல‌லிதாவின் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயல‌லிதாவின் பொற்கால ஆட்சி அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.