வாழ்வாதாரமாக தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு!

முல்லைத்தீவு மாவட்ட செயலக கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட தையல் துறைசார் பயிற்சி நெறிகளின் அடிப்படையில் அவர்களது வாழ்வாதாரத்தை விருத்தி செய்து பெண் தொழில் முயற்சிகளை ஊக்கப்படுத்தும் முகமாக மாவட்ட செயலகத்தில் இன்று(08) இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினத்தில் வைத்து தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தையல் இயந்திரங்களை மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்ட செயலாளர், கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

இதன்போது குறித்த பயனாளிகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.