இந்திய தூதுவர் திருக்கேதீச்சர ஆலயத்தில் இன்று வழிபாட்டில் ஈடுபட்டார்..

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள் திருக்கேதீச்சரத்திற்கு வருகை தந்து வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளார்

புகழ்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்கள் ஒன்றானதும் பாடல் பெற்ற திருத்தலமுமான திருக்கேதீச்சரத்தில் சிவராத்திரி திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற இருக்கின்றது

இதேவேளை இன்று காலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்கலே அவர்கள் மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்திற்கு வருகை தந்து இந்திய அரசின் உதவியுடன் நடைபெற்றுவரும் கருங்கல் சிற்ப வேலைகளையும் இதர வேலைகளையும் பார்வையிட்டதோடு வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.

ஆலயத்தில் சிவராத்திரி பூஜைகளில் கலந்து இலங்கை – இந்திய மக்களின் நலனுக்காக அவர் பிரார்த்தித்தார்.

அருள்நிறைந்த திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் ஆசிபெற்று வடமாகாணத்துக்கான தனது விஜயத்தினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆரம்பித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.