சஜித்தின் ஆட்சி அமையமாட்டாது பொன்சேகாவின் கருத்துக்கு இராஜாங்க அமைச்சர் பதில்.

சஜித்தின் ஆட்சி அமையமாட்டாது
பொன்சேகாவின் கருத்துக்கு
இராஜாங்க அமைச்சர் பதில்.

“சரத் பொன்சேகா கூறுவதுபோல் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி ஒருபோதும் அமையாது. எமது ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்”

இவ்வாறு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றக் தெரிவுக்குழுதான் கண் துடைப்பு நாடகம். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை என்பது இறுதியானது அல்ல. அதில் நல்ல விடயங்களும் உள்ளன. ஏற்றுக்கொள்ள முடியாத சில விடயங்களும் உள்ளன. எது எப்படி இருந்தாலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.