மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக
கடமையாற்றிய எம் .என் .நுவான் மெண்டிஸ் பொலிஸ் அத்தியட்சகர்
இடமாற்றம் பெற்று சென்றுள்ளதை தொடர்ந்து புதிய பொலிஸ்
அத்தியட்சகராக சுதத் மா சிங்க இன்று தனது கடமைகளை
சுபவேளையில் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள பொலிஸ்
அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமைப்பொறுப்புக்களை
பொறுப்பேற்றுக்கொண்டார்.

சர்வமத வழிபாடுகளுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகரின் பாரியார் உட்பட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி மற்றும் மாவட்டத்தின் 12 பொலிஸ் பிரிவின்
பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.