பாடசாலைக் கல்வித் திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாக இணைப்பதற்கு ஆலோசனை

இலங்கையின் சட்டங்கள் தொடர்பில் பொதுமக்களின் அறிவு மிகவும் குறைவான மட்டத்தில் காணப்படுகின்றது எனவும், அது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு அடிப்படைப் புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானதாகும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

முன்னேற்றமடைந்த நாடுகளில் அடிப்படை சட்டம் தொடர்பில் குடியியல் கல்வி வழங்கப்படுகின்றது எனவும், பாடசாலைப் பாடத் திட்டத்தில் சட்ட அறிவை இணைப்பது அவசர தேவையாக உள்ளது எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டின் தேசிய கல்வித் திட்டத்தில் இலங்கையின் சட்டத்தையும் ஒரு பாடமாக உள்ளடக்குவதற்குப் பொருத்தமான நெறிமுறையொன்றைத் தயாரிக்க நாடாளுமன்ற உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

பாடசாலைக் கல்வித் திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாகக் கொண்டு வருவது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட உப குழு, அதன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.