பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயது மாணவிக்குக் கொரோனா!

பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயது மாணவி ஒருவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் மூன்று பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதியாகியுள்ளது.

மன்னாரில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த பெண் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு சுயதனிமைப் படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.