பெட்ரோல் வாசனையை நுகர்ந்த சிறுவன் உயிரிழப்பு.

இலங்கை, தம்புள்ளை – வெலமிடியாவ பகுதியில் 7 வயது சிறுவன் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தொட்டியில் இருந்து மூடியை அகற்றி பெட்ரோல் வாசனை நுகரச்சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதில் தம்புள்ளை வெலமிடியாவ ஆரம்பப்பள்ளியில் தரம் இரண்டில் கல்வி பயிலும் சஜித் குமார முனசிங்க என்ற 7 வயதுச் சிறுவனே உயிரிழந்துள்ளார்.

மேலும், மயக்க நிலையில் இருந்த சிறுவனை கலேவெல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.