கொரோனா தடுப்புக்கு சித்த மருத்துவ பொடியை சோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா தடுப்புக்காக தமிழகத்தில் உருவாக்கப்பட்ட இம்ப்ரோ சித்த மருத்துவப் பொடியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிசோதித்து ஆகஸ்ட் 3ம்தேதி விளக்க அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிளை நீதிமன்றத்தில், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் சித்த மருத்துவர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

பாளையம்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் சித்த மருத்துவர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கில், அவர் உருவாக்கியுள்ள இம்ப்ரோ பொடியில் 66 விதமான மூலிகைகள் உள்ளதாகவும், இந்த பொடியை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் பலவிதமான வைரஸ் நோய்களுக்கு தடுப்பு மருந்தாக செயல்படும் எனவும் தெரிவித்தார்.

Comments are closed.