கொரோனா அபாயத்தால் யாழ். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மூடல்!

யாழ். மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி நாளை திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதானர்மடம் இராமநாதன் கல்லூரியின் அதிபர், ஆசிரியர் ஆகியோர் இன்று கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டதையடுத்து சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பத்திலேயே மீளத்திறக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.