இருண்ட இலங்கைக்கு தேரர்கள் வழி காட்டுகிறார்களா? : மனோ காட்டம்

கறுப்பு ஜூலை புகழ் கொண்ட ஒரு தேரர் உட்பட பெளத்த தேரர்களின் குழு மூன்று பிரேரணைகளை தேசிய அரங்கில் முன் வைத்துள்ளது.

1)நாட்டின் பெயரை “சிங்களே” என மாற்றனும்.
2)அதிகார பரவலாக்கம் வேண்டவே வேண்டாம்.
3)சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி.

அதாவது இந்த தேரர்கள் மறைமுகமாக, “உங்களுக்கு இங்கு இடமில்லை. தனித் தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள்” என தமிழர்களுக்கும், “அதற்கு உதவுங்கள்” என சர்வதேச சமூகத்துக்கும் கூறுகிறார்கள் என நினைக்கிறேன்.

ஆகவே, இந்த தேரர்கள்தான் இன்று இலங்கையின் பிரதான பிரிவினைவாதிகள். மீண்டும், மீண்டும், இலங்கைக்கு கறுப்பு “பெயிண்ட்” அடிக்கிறார்கள்..!என மனோ கணேசன் எம்.பீ காட்டமாக சில தேரர்களின் கருத்துக்கு பதில் கருத்தாக டுவிட் செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.