கடல்வழியாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 20 நபர்கள் கைது.

சிலாபம் கோண்டாச்சிகுடா பகுதியில் நேற்று முன்தினம் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போது கடல்வழியாக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 20 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான நான்கு முச்சக்கர வண்டிகளை இடைநிறுத்திய கடற்படையினர் அவர்களிடம் மேற்கொண்ட சோதனைகளின்போதே சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களில் 16 வயது சிறுவன் உட்பட 15 ஆண்களும், 13 வயது சிறுமி உட்பட ஐந்து பெண்களும் உள்ளடங்கியுள்ளனர்.

குறித்த நபர்கள் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், வத்தளை, புத்தளம் மற்றும் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு இச் சட்டவிரோத வெளியேற்ற முயற்சியை உருவாக்கிய ஒருவரும் கைது செய்யப்பட்ட குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட முச்சக்கர வண்டி என்பன சிலாம் பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.