மணியின் கைதுக்கு கஜேந்திரகுமாரும் கண்டனம்!

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது.

அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அரசின் பாசிச ஆட்சியை நோக்கிய நகர்வுகள் உச்சத்தை எட்டியுள்ளன. இன மற்றும் அரசியல் ரீதியான பாதுகாப்பின்மை மோசமாகியுள்ளது எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.