ஐபிஎல் கிரிக்கெட்டில் 350 சிக்சர் அடித்த முதலாவது வீரர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 28 பந்தில் 40 ரன்கள் அடித்த கிறிஸ் கெய்ல், இரண்டு சிக்சர்கள் விளாசினார்.

டி20 கிரிக்கெட் என்றாலே நினைவுக்கு வரும் முதல் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல்தான். சிக்சர் வாணவேடிக்கை நிகழ்த்துவதில் சிறந்தவர்.

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

3-வது வீரராக களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடினார். அவர் 28 பந்தில் 40 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.

முதல் சிக்சர் அடிக்கும்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் 350-வது சிக்சரை பதிவு செய்தார். மொத்தமாக 351 சிக்சர்கள் அடித்துள்ளார். 2-வது இடத்தில் டி வில்லியர்ஸ், 3-வது இடத்தில் எம்எஸ் டோனி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.