விபத்தில் படுகயாமடைந்த விடுமுறையில் சென்ற படையினன் ஒருவர் உயிரிழப்பு.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் 12.04.21 அன்று இடம்பெற்ற விபத்தில் படுகயாமடைந்த விடுமுறையில் சென்ற படையினன் ஒருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில் கெப்பற்றிக்கொலாவ பகுதியினை சேர்ந்த 37 அகவையுடைய படையினர் விடுமுறையில் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த வேளை முள்ளிவாய்க்கால் பகுதியில் கப் வாகனம் மோதித்தள்ளி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது இதன் போது காயமடைந்த படையினன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்பொது மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டபோது அங்கு சிகிச்சை பலனின்றி 13.04.21 அன்று உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தினைஏற்படுத்திய கப் சாரதி வாகனத்தினை விட்டு தப்பிஓடியுள்ளார். விபத்து குறித்து முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் வாகனம் முல்லைத்தீ பொலீஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் உரிமையாளரை கண்டறிந்து சாரதியினை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.