ஐந்து ட்ரோன் விமானங்களை இலங்கைக்கு வழங்கிய ஆஸி.

சட்டவிரோத கடல் பயணங்களைக் கண்காணிக்க ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு 5 ட்ரோன் விமானங்களை வழங்கியுள்ளது.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான சட்டவிரோத கடல் பயணங்களைக் கண்காணித்து கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவே இவ்வாறு ட்ரோன் விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா எதிர்கொண்டுள்ள பெரும் சவாலாக சட்ட விரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், ஆட்கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா ட்ரோன் கண்காணிப்பு விமானங்களை வழங்கியுள்ளது.

மிகவும் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடல் பயணங்களை மறைந்திருந்து கண்காணிக்கும் திறன்கொண்ட நவீன ட்ரோன்களே இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.