தொல்பொருள் முகாமைத்துவத்திற்கென புதிய ஜனாதிபதி செயலணி

கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக புதிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் 11 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் மற்றும் நில அளவை ஆணையாளர் ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளங்கண்டு அவற்றை பாதுகாத்தல் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து அது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது ஜனாதிபதி செயலணியின் நோக்கமாகும். அத்தடன் பாதுகாப்பான நாடு, சட்டத்தை மதிக்கும் ஒழுக்கமுள்ள சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காகவும் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ ஜனாதிபதி செயலணிக்கு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.