யாழில் 10 பேர் உட்பட வடக்கில் மேலும் 12 பேருக்குக் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் 404 பேரின் மாதிரிகள் இன்று சனிக்கிழமை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 10 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களில் யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவரும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நால்வரும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திலும் இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.