பஸ்ஸர பஸ் விபத்துக்கு காரணமான சாரதி இராணுவத்திலிருந்து ஓடிய ஒருவர்

பஸ்ஸர பஸ் விபத்துக்கு காரணமாகி 14 பயணிகளின் உயிருக்கு உலை வைத்த சாரதி இராணுவத்திலிருந்து தப்பிய லான்ஸ் கார்போரல் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்தார்.

விபத்துக்கு காரணமான சாரதியான கொடிதுவக்கு ஆராச்சிகே நிஹால் சந்தகுமார சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு 2011 ல் இராணுவத்திலிருந்து ஓடியவர் என ராணுவ செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

சந்தகுமார இராணுவ விதிகளை மீறியமை குறித்து இராணுவம், சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்தோடு பஸ் சாரதி, இராணுவத்தின் கெமுனு சேவை படையணியைச் சேர்ந்தவர் என்றும் பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.