கொரோனா பாதுகாப்பு தொடர்பில் செயல்படும் சிவன் அறக்கட்டளை இயக்குனர் கணேஷ் வேலாயுதம்
![](https://www.ceylonmirror.net/wp-content/uploads/2020/06/Ganesh.jpg)
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பில் பல வேலைத் திட்டங்களை சிவன் அறக்கட்டளையினர் செய்து வருகிறார்கள். அது தொடர்பாக இக் கால கட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் , முகக் கவசங்கள் மற்றும் உலர் உணவு பொருட்கள் போன்றவற்றை சிவன் அறக் கட்டளை இயக்குனர் கணேஷ் வேலாயுதம் தலைமையின் கீழ் தொடர்ச்சியாக நாட்டின் பல பாகங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கண்டி தேசிய வைத்தியசாலை , பேராதனை போதனா வைத்தியசாலை , அக்குறனை பிரதேச செயலகம் போன்றவற்றில் பணிபுரியும் வைத்திய அதிகாரிகள் ,தாதியர் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கும் பாதுகாப்பு முகக் கவசங்கள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர்கள் , மதத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேபோல யாழ்பாணம் மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் சிகையரங்கார நிலையங்கள் ஆகியவற்றிற்கும் இவ்வகையான முகக் கவசங்களும் , உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
Comments are closed.