மே தினப் பேரணியை ஒன்லைனில் நடத்த ஜே.வி.பி. தீர்மானம்.

இலங்கையில் தற்போதுள்ள கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக மே தினப் பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜே.வி.பி. தனது மே தின நினைவுகளை ஒன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், எதிர்வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஒன்லைன் மூலம் மே தினப் பேரணி இடம்பெறும் எனக் கூறினார்.

உழைக்கும் சமூகத்துக்காகவும், அடக்குமுறையை மேற்கொள்ளும் தலைவர்களிடமிருந்து தங்கள் உரிமைகளை கோருவதற்காகவும் மே தினம் நினைவுகூரப்படுகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.