இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 240 கிலோ கஞ்சா தீயிட்டு எரிப்பு!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாகக் கருதப்படும் 240 கிலோ கிராம் கஞ்சா கொரோனா அச்சம் காரணமாக தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

யாழ். மாதகல் கடற்கரையோரத்தில் மறைத்து வைத்திருந்த 240 கிலோ கஞ்சாவை இன்று அதிகாலை கடற்படையினர் கைப்பற்றினர்.

இவ்வாறு கைப்பற்றிய கஞ்சாவைப் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

எனினும், தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவால் குறித்த கஞ்சாவைக் கையாள்வதில் உள்ள சுகாதார நெருக்கடி காரணமாக அவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.