இலங்கையில் இன்று அதிகாலை முடக்கப்பட்ட பகுதிகள்.

நாட்டில் கொவிட்-19 பரவல் காரணமாக 3 மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி ,மொனராகலை மாவட்டத்தின், வெல்லவாய நகர சபை அதிகார பிரதேசம் மற்றும் வெஹெரயாய, கொட்டம்பபொக்க, புத்தல – ரத்னகம முதலான கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் அத்துடன், அம்பாறை மாவட்டத்தின், உகன – குமாரிகம கிராம சேவகர் பிரிவும், மாத்தளை மாவட்டத்தில், நாவுல – அளுகொல்ல கிராமசேவகர் பிரிவும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.