இலங்கையில் சகல மத வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்குத் தடை

இலங்கையில் அனைத்து மத வழிபாட்டு இடங்களிலும் கூட்டுச் செயற்பாடுகளுக்கு இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத வழிபாட்டு இடங்களில் ஒரே நேரத்தில் 25 பேர் மாத்திரமே வழிபாட்டில் ஈடுபட முடியும் எனவும் சுகாதார பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.