போயிங் நிறுவனம் இந்தியாவுக்கு அவசரகால உதவி வழங்குவதாக அறிவிப்பு.

அமெரிக்காவில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் இந்தியாவுக்கு 74 கோடி ரூபாய் அவசரகால உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அவசர சிகிச்சைக்கான மருந்துகள்,மருத்துவ கருவிகள் ஆகியவற்றை வழங்குவதும் இதில் உள்ளடங்குகின்றன.

என்ன உதவிகள் தேவை என அரசு ,பொது சுகாதாரத் துறை வல்லுநர்கள் உடன் கலந்து ஆலோசித்து இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள நிவாரண உதவி நிறுவனங்கள் மூலம் இந்த உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.