கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி

கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே அனுமதியளித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலை, நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலை உள்ளிட்ட நாடு பூராகவும் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மத்திய நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கொவிட் நோயாளர்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.