யாழில் ஊடக சுதந்திர தின நிகழ்வு! – கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று யாழ். ஊடக அமையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூபி இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

அத்துடன் பெருந்தொற்று நோயான கொரோனோவால் உயிரிழந்தவர்களும் நினைவுகூரப்பட்டனர். கொரோனோப் பெருந்தொற்றலிருந்து மக்கள் மீண்டு வரவேண்டும் எனவும் இதன்போது பிரார்த்திக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனோத் தொற்று காரணமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.