ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி இலங்கைக்கு இன்று கையளிப்பு.

கொரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி இலங்கைக்கு இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டு ரஷ்யத் தூதரகத்தால் கையளிக்கப்பட்டது.

இதன்படி, முதல் தொகுதியாக 15 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டது. உடனடியாக மேல் மாகாணத்தில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த 15,000 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்ட பின்னரே ரஷ்யா, மேலதிகமாக 2 இலட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை அனுப்பும் என்று அறிவித்துள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் ஒருவருக்கு ஒரு டோஸ் அளவில் தேவைப்படுகின்றதோடு, இது அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளைப் போன்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொரோனா வைரஸுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் செயல்திறன் 91.6 சதவீதமாக இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஸ்பூட்னிக் – வி தடுப்பூசிகளை இலங்கை 9.95 டொலர் விலையில் கொள்வனவு செய்கிறது

இதேவேளை ரஷ்யா இலங்கைக்கு மேலதிக மருத்துவ உபகரணங்களையும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.