சுகாதார நடைமுறையை பின்பற்றாதோருக்கு எதிராக நடவடிக்கை!- பொலிஸார் எச்சரிக்கை.

யாழ்ப்பாணத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இன்று மாலை நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் யாழ். மத்திய பஸ் நிலைய சாரதிகள் மற்றும் நடத்துநர்களுடன் கலந்துரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எதிர்வரும் நாட்களில் பஸ்களில் ஆசன அளவுக்கு அமைவாக பயணிகளை ஏற்றாதோர், பஸ்களில் முகக்கவசம் இன்றி பயணிப்போர் மற்றும் ஏனைய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.