ஒரு வாரத்துக்காவது நாட்டை முடக்குங்கள்! – அரசிடம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை.

இலங்கையில் நாளாந்தம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையால், ஒரு வாரத்துக்காவது நாட்டை முடக்குமாறு அரசிடம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண ஊடகங்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

புதிய சுகாதார வழிகாட்டல்களை மீறி அரச மற்றும் தனியார் துறைகளில், மாநாடுகள், சேவையாளர்களின் சந்திப்பு என்பன இடம்பெறுவது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.