இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் இயங்காது.

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையால் இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபடாது என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் 3 நாட்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் இயங்காது என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளரான பண்டுக்க ஸ்வர்ணஹன்ச தெரிவித்துளார்.

அரசாங்கமானது நாளை விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் நிறுவனங்கள் பல இயங்குவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.