நள்ளிரவு இரண்டு கடைகள் தீப்பிடித்து முற்றாக சேதம்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர்-9 ம் பிரிவு மூன்றாம் குறுக்குத் தெருவில் அல் மினா பாடசாலைக்கு அருகாமையில் அமையப்பெற்றுள்ள இரண்டு கடைகள் தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.

இதன்போது ஹார்ட்வேர் (இரும்பு கடை) மற்றும் பலகை கடை ஆகியனவே தீப்பிடித்து எரிந்துள்ளது.

ஹார்ட்வயார் கடையில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை ,குறித்த கடையினுள் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளமையால் அவைகள் வெடித்து சிதறலாம் என்ற அச்ச நிலைமை இருந்தபோதும் பாரிய சேதங்கள் எதுவுமின்றி நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .

Leave A Reply

Your email address will not be published.