உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவு பற்றி விசாரணை வேண்டும் சபையில் ஹக்கீம் எம்.பி. கோரிக்கை

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவும் இருந்துள்ளது. இது தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி குறித்து எனது உரையின்போது இதற்கு முன்னரும் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளேன்.

இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு இதன் பின்னணியில் இருந்துள்ளது என்பதற்கான தகவல்கள் உள்ளன. ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது பற்றியும் ஆராயப்பட வேண்டும்.

அதேவேளை, இளம் முஸ்லிம் கவிஞர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் சர்வதேச அமைப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன. அரசின் இவ்வாறான அணுகுமுறையால் நம்பகத்தன்மை ஏற்படுகின்றது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.