ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் 5 பேர் உட்பட 26 பேருக்கு கொரோனா தொற்று.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

அதேவேளை பின்வரும் சுகாதார பிரிவுகளில்
வாழைச்சேனை – 9
ஓட்டமாவடி – 3
ஏறாவூர் – 2
வாகரை – 2
மட்டக்களப்பு – 4
வெல்லாவெளி – 1,
வவுணதீவு – 2 (ஆடை தொழிற்சாலை)
ஆரையம்பதி – 1(ஆடை தொழிற்சாலை)
ஆடைத் தொழிற்சாலை – 2

உட்பட 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.