சீனா அரசாங்கத்தால் இலங்கைக்கு மேலும் 5 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசி.

நேற்று நள்ளிரவு பீஜிங்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் எயார்லைஸ் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டதுடன் சீன தூதுவரால் குறித்த தடுப்பூசி தொகை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படது.

சீனா அரசாங்கத்தின் நன்கொடையாக இதற்கு முன்னர் 6 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் இந்த 5 இலட்சம் தடுப்பூசிகள் மேலதிகமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதைவேளை சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த கடட்மாக இரண்டு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையை வந்தடையவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.