எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் பதவி விலக வேண்டும் – ஶ்ரீ.பொ.பெ

எரிபொருள் விலையினை அதிகரித்தது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இவ்வாறான நிலைமையை தோற்றுவித்தது தொடர்பில் முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி விலக வேண்டும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை இணைக்குழு எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு அனுமதி வழங்கியதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.