பரீட்சைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்

கல்வி பொதுத்தராதர (உ/த) பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான புதிய திகதிகள் இன்று (14) அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு பரீட்சை திகதிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார். மேலும்,

“பாடசாலைகளை மீள திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளும் தாமதமாகும்.

உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை ஒரே சந்தர்ப்பத்தில் நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டது. எனினும் பாடசாலைகள் ஆரம்பமாவதில் தாமதமானால் புலமைப்பரிசில் பரீட்சையை தனியாக நடத்தவேண்டி ஏற்படும்.” – என்றார்.

இதேவேளை பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை, கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments are closed.