‘தெல்பாலா’வின்மகள் ஹெரோயினுடன் கைது.

நிழல் உலக தாதா ‘தெல்பாலா’ என்றழைக்கப்படும் கருப்பையா பாலனின் மகளான நிர்மலா (வயது – 41) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு,கிராண்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே 50 கிராம் ஹெரோயினுடன் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, இந்தியா தப்பிச் சென்று தலைமறைவாக வாழ்ந்த தெல்பாலா அங்கு உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.