கொரானா தாக்கம் : மெல்ஸ்டா மருத்துவமனை அதிரடியாக மூடப்பட்டது

கண்டகாடு மறுவாழ்வு மையத்தில் சொற்பொழிவுகளை நடத்திய மெல்ஸ்டா மருத்துவமனை பொது மேலாளருக்கு (ஜி.எம்), கோவிட் -19 உள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து ராகமயிலுள்ள மெல்ஸ்டா மருத்துவமனை மூடப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

ராகமவுக்கு பொறுப்பான பொது சுகாதார ஆய்வாளர் (பி.எச்.ஐ) கொழும்பு வர்த்தமானியில், மருத்துவமனையின் பொது மேலாளருக்கு கோவிட் -19 சோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது என கூறினார்.

மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் மீது பி.சி.ஆர் அல்லது கோவிட் -19 சோதனைகள் நடைபெற்று வருகின்றன, இதைத் தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

இதற்கிடையில், பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் கிடைக்கும் வரை மெல்ஸ்டா மருத்துவமனையை தற்காலிகமாக மூட மருத்துவமனை நிர்வாகம் அதிரடியாக முடிவு செய்துள்ளது.

Comments are closed.