எரிபொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய மக்கள் சக்தி உத்தேசம்

கொழும்பு : எரிபொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மையமாகக்கொண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளது.

கட்சியின் உள்ளகக் கலந்துரையாடல்களில் இவ்விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

துறைசார் அமைச்சருக்கு எதிராகவா அல்லது அரசுக்கு எதிராகவா என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

தற்போதைய பிரதான எதிர்க்கட்சியால் முன்வைக்கப்படும் முதல் நம்பிக்கையில்லாப் பிரேரணை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.