இலங்கையில் ஒன்லைன் ஊடாக மதுபானம் விற்பனையா?

ஒன்லைன் முறைமையின் ஊடாக, பல்பொருள் அங்காடிகளில் மதுபானங்களை கொள்வனவு செய்யலாம் என்றொரு செய்தி உலாவுகிறது.

இதன்படி ,ஒன்லைன் முறைமையின் ஊடாக பல்பொருள் அங்காடிகளில் மதுபானங்களை கொள்வனவு செய்யலாமென வெளியாகியிருக்கும் செய்தியில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லையென கலால் திணைக்களத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனை , கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்ஹவும் உறுதிப்படுத்தினார்.

மேலும் ,ஒன்லைன் முறைமையின் ஊடாக ​மதுபானங்களை விற்​பனை செய்வதற்கான அனுமதியை பல்பொருள் அங்காடிகளுக்கு பெற்றுதருமாறு சில பல்பொருள் அங்காடிகளின் ஊடாக, கலால் திணைக்களத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்ஹ மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.